” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

பிறந்த மனை

சீவியம் இங்கேதான் சுகத்தைப் பெற்றது
தாவியும் கூவியும் மகிழ்ச்சியைக் கற்றது
பூவினில் தேனதை வண்டாக உண்டது
நாவுரைத்த மொழியும் அழகைக் கண்டது

பிஞ்சுக்களாய் கொஞ்சி விளையாடிய மைதானம்
பஞ்சமில்லா உற்சாகங்களை நாட்களும் காணும்
வஞ்சகத்தை அறியாதே வளர்ந்துகொண்டேன் நானும்
நெஞ்சை விட்டகலாது நினைவுகளும் பேணும்

என் பெற்றோர்கள் வாழ்ந்திட்ட ஆலயம்
அன்பினை சுமந்து சுற்றிய குவலயம்
உண்மையை உயிராக்கி உலவிய உறவுகள்
ஒன்றாக வாழ்ந்ததால் நன்மையின் வரவுகள்

அறைகள் ஆறைக்கொண்ட அம்சமான கல்வீடு
குறைவில்லா கும்மாளத்தின் குருவிகளின் கூடு
முத்தத்தில் கனிகளோடு நிழல்தரும் மாமரம்
சித்தங்குளிர விளையாடும் குழந்தைகட்கு மாவரம்

வாழ்வின் பக்கங்கள் பளுவின்றி கழிந்தவிடம்
வாழ்வை வாவென்றே சொர்க்கத்திற்கே அழைத்துவிடும்
எனக்கென்று எனக்கென்று செய்தாலும் அதிகாரம்
தனக்கென்று உள்ளதை பகிர்ந்திடுவார் யாரும்

கூடப்பிறந்தவரே உண்மையான சொத்து என்று
கூடி வாழ்ந்தவரால் கண்டுகொண்டேன் அன்று
பிறந்த மனைபற்றி கூறியதெல்லாம் இயற்கை
சிறப்புதனை செப்புகின்றேன் சிறிதுமில்லை செயற்கை

பிடித்ததொரு வாழ்வொன்று இன்றுந்தான் உண்டு
பிடிப்பில்லா காரியத்தை சேர்த்துந்தான் கொண்டு
இயன்றவரை முயற்சிக்கின்றேன் அன்றையதை அருகமைக்க
பயனடைந்து மறுபடியும் முன்னர்போல வடிவமைக்க

ஜெயம்
19-11-2023

Nada Mohan
Author: Nada Mohan