ஜெயம் தங்கராஜா

சசிச

ஆசான்

போதனையால் மாணவர்க்கு நல்லறிவை ஊட்டி
சாதனையாளராக்கி வெற்றிக்கு பின்னிருக்கும் வழிகாட்டி
எங்களின் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக்கவே
தங்களை அர்ப்பணித்து தந்தார்கள் ஊக்கமே

கல்லாக இருந்தவரும் சிலையாக உருமாற்றம்
சொல்லுக்கேட்கா குழப்படிகளும் அடைந்தனரே மாற்றம்
கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் தன்மை
சொல்லப்போனால் உன்னத பணியாளர் உண்மை

கரும்பலகையில் சுண்ணாம்புக் கட்டியால் கோலம்
உருப்பட்டுக்கொண்டது அன்றிலிருந்தே பொன்னான காலம்
கசடறக் கற்றே உள்வாங்கியவை ஏராளம்
நிசமாக ஓயாதுரைத்ததால் கற்றவைகள் தாராளம்

கணித ஆசிரியரால் கணக்கிலே புலி
கனவிலும் சுவைத்தேன் தமிழெனும் தேன்துளி
தலைமுறை தலைமுறையாக வளர்த்துவிடும் சேவை
களைக்காத இவருழைப்பு சமுதாயத்திற்கு தேவை

ஆசான் என்பவர் என்றும் வணக்கத்துக்குரியவர்
பேசாத தத்துவமா பெருமைக்குரிய பெரியவர்
ஊக்கத்தை உரமாக்கி வளர்த்தவரே வாழ்கவே
நோக்கத்தின் புனிதத்தை
வணங்கிடும் வாழ்க்கையே

ஜெயம்
22-10-2024

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading