” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

ஆசான்

போதனையால் மாணவர்க்கு நல்லறிவை ஊட்டி
சாதனையாளராக்கி வெற்றிக்கு பின்னிருக்கும் வழிகாட்டி
எங்களின் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக்கவே
தங்களை அர்ப்பணித்து தந்தார்கள் ஊக்கமே

கல்லாக இருந்தவரும் சிலையாக உருமாற்றம்
சொல்லுக்கேட்கா குழப்படிகளும் அடைந்தனரே மாற்றம்
கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்றுத்தரும் தன்மை
சொல்லப்போனால் உன்னத பணியாளர் உண்மை

கரும்பலகையில் சுண்ணாம்புக் கட்டியால் கோலம்
உருப்பட்டுக்கொண்டது அன்றிலிருந்தே பொன்னான காலம்
கசடறக் கற்றே உள்வாங்கியவை ஏராளம்
நிசமாக ஓயாதுரைத்ததால் கற்றவைகள் தாராளம்

கணித ஆசிரியரால் கணக்கிலே புலி
கனவிலும் சுவைத்தேன் தமிழெனும் தேன்துளி
தலைமுறை தலைமுறையாக வளர்த்துவிடும் சேவை
களைக்காத இவருழைப்பு சமுதாயத்திற்கு தேவை

ஆசான் என்பவர் என்றும் வணக்கத்துக்குரியவர்
பேசாத தத்துவமா பெருமைக்குரிய பெரியவர்
ஊக்கத்தை உரமாக்கி வளர்த்தவரே வாழ்கவே
நோக்கத்தின் புனிதத்தை
வணங்கிடும் வாழ்க்கையே

ஜெயம்
22-10-2024

Nada Mohan
Author: Nada Mohan