ஜெயம் தங்கராஜா

சசிச

உயிர்க்கொடை

அல்லும்பகலும் இனம் காக்க உழைப்பு
இல்லை உறக்கம் இதுவே நாளாந்த பிழைப்பு
வெய்யிலோ மழையோ இல்லையொரு பொருட்டு
செய்யும் பணிக்கு தடையாயில்லை இருட்டு

வீரர்கள் இவரைப்போல் வையகத்தில் எங்கு
யாரவர் இருந்தால் உரைப்பீரோ இங்கு
உயரிய நோக்கத்துடன் புறப்பட்ட புயல்
உயிரையும் கொடையாக்கி செய்திட்ட அருஞ்செயல்
தலைவன் வழிகாட்டலில் அறத்துக்கான போராட்டமது
களைக்காது களமாடிய மறவர்கள் கூட்டமது
முடியாத நிலையிலும் முடிந்ததை முடித்தார்
விடிவுக்காய் வெடிபட்டு விட்டுயிர் மடிந்தார்

இனத்திற்கு கிடைத்திட்ட மாபெரும் செல்வங்களே
தனக்கென வாழாத மாவீர தங்கங்களே
போற்றி வணங்கிடும் உன்னத பிறப்பு
காற்றிலே கரைந்திடினும் மங்குமோ சிறப்பு

,ஜெயம்
25-11-2024

Nada Mohan
Author: Nada Mohan