ஜெயம் தங்கராஜா

சசிச

காதல் காதல்

சொல்லத் துடிக்கும் உதடுகளும் சொல்லாமலிருக்கும்
சொல்லாமலே இதயம் காதலைப் பருகும்
மொழியும் இங்கே மவுனம் காத்திடும்
விழிகளின் பேச்சால் காதலும் பூத்திடும்

இவன் அவளுக்குள் தொலையாமல் தொலைவான்
அவள் இவனுக்குள் தொலையாமல் தொலைவாள்
இதயங்கள் ஒன்றையொன்று இடமாற்றம் நிகழும்
உதயமாம் காதலில் இரவில்லாப் பகலும்

மனம் பூஞ்சோலையாக பட்டாம்பூச்சிகள் பறக்கும்
கணம் ஒவ்வொன்றும் சுகங்களை நிறைக்கும்
பேசுவது கிளியாவென இவன் சொல்ல
கூசவும் இவள் தலைகுனிவாள் மெல்ல

எத்தனை சொந்தங்களிருந்தும் விரும்பிய சொந்தமாம்
சித்தமும் மீட்டிடும் காதலின் சந்தமா ம்
அவளுக்கு பிடிக்காததை இவனோ தவிர்ப்பான்
அவளும் அவனின் அருகாமைக்காய் தவிப்பாள்

சீவனுக்குள் சீவன் செருகிவிடும் புதுமை
நாவதனில் கொஞ்சுகின்ற மொழியூட்டும் இனிமை
இந்நொடி நீளாதோ என்கின்ற தன்மை
வந்துவிடும் காதலித்தால் அனுபவித்த உண்மை

ஜெயம்
10-02-2025

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading