அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 616
அது அப்படியல்ல இப்படி

விடிந்து விட்டது விடிந்து விட்டது என்பார்
வெளுப்பதெல்லாம் விடியவில்லை
முடிந்து விட்டது முடிந்துவிட்டது என்பார்
மொத்தமாக முடியவில்லை
கற்றேன் கற்றேன் என்பார்
கடுகளவும் கூட அறியவில்லை
பெற்றேன் பெற்றேன் என்பார்
பிள்ளைகளைத் தவிர பெறவில்லை

அளிக்கின்றேன் அளிக்கின்றேன் என்பார்
தன்னுடையதை அளிக்கவில்லை
ஒழித்திடுவேன் தீமையை என்பார்
பேய்க்குணம் விடவில்லை
தேடிவிட்டேன் தேடிவிட்டேன் என்பார்
தன்னையே இன்னும் தேடவில்லை
சூடிவிட்டேன் மகுடம் என்பார்
கோட்டைக்குள்ளே நுழையவில்லை

ஆறறிவோடு பிறந்த அதிசயப் பிறப்பாக மனிதன்
தடுமாறி நடந்தாலும் ஆடுகின்றேனென கூறுவான்
பசியாறவில்லையெனினும் அமுதம் உண்டெனென்பதில் பெருமை
பூமிவாசிகள் புகழ்பாடும் வில்லுப்பாட்டை கேட்டாலே இனிமை

ஜெயம்
03-08-2022

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading