திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

கவி 616
அது அப்படியல்ல இப்படி

விடிந்து விட்டது விடிந்து விட்டது என்பார்
வெளுப்பதெல்லாம் விடியவில்லை
முடிந்து விட்டது முடிந்துவிட்டது என்பார்
மொத்தமாக முடியவில்லை
கற்றேன் கற்றேன் என்பார்
கடுகளவும் கூட அறியவில்லை
பெற்றேன் பெற்றேன் என்பார்
பிள்ளைகளைத் தவிர பெறவில்லை

அளிக்கின்றேன் அளிக்கின்றேன் என்பார்
தன்னுடையதை அளிக்கவில்லை
ஒழித்திடுவேன் தீமையை என்பார்
பேய்க்குணம் விடவில்லை
தேடிவிட்டேன் தேடிவிட்டேன் என்பார்
தன்னையே இன்னும் தேடவில்லை
சூடிவிட்டேன் மகுடம் என்பார்
கோட்டைக்குள்ளே நுழையவில்லை

ஆறறிவோடு பிறந்த அதிசயப் பிறப்பாக மனிதன்
தடுமாறி நடந்தாலும் ஆடுகின்றேனென கூறுவான்
பசியாறவில்லையெனினும் அமுதம் உண்டெனென்பதில் பெருமை
பூமிவாசிகள் புகழ்பாடும் வில்லுப்பாட்டை கேட்டாலே இனிமை

ஜெயம்
03-08-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading