அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

சொந்தங்களே சொத்துக்கள்

சொந்தங்கள் நடுவில் வாழ்கின்ற போது
சிந்திடும்  ஆனந்தத்திற்கு எல்லைதான் ஏது
வந்து வாழ்க்கையை அழகாக்கும் தினமும்
தந்து சுகத்தை கரைந்திடும் கணமும்

உள்ளத்து அடியில் பாசமாய்ப் பொங்கிடும்
கள்ளம் இல்லாத நேசமாய்த் தங்கிடும்
கட்டி அணைக்கையில் உயிரும் உருகிடும்
கட்டி இன்பத்தை வாழ்க்கையும் பெருக்கிடும்

உறவுகள் அருகினிலே ஒருகோடி நிம்மதி
வரவாகும் என்பதெல்லாம் தெரிந்ததோர் சங்கதி
தனிமையே போதுமென நெருக்கத்தை தவிர்த்திடலாமா
இனிமையை அனுபவியாது இறுதிவரை தவித்திடலாமா

ஜெயம்
08-08-2022

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading