” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-31.10.2023
கவி இலக்கம்-240
மாவீரனே
——————-
கார்த்திகை 27 ல் மாவீரன் நினைவை நாளை மறப்போமா
எம் மண்ணை மீட்க உயிர் துறந்த மறவனே
எண்ணற்ற கனவோடு களம் புகுந்தவனே
காடு மேடு பற்றை முள் கடு கடந்து தாண்டி வந்தவனே
களத்திலே உயிரை கொடுத்து தியாகி ஆனவனே
உயிரை கொடுத்து தமிழ் மண்ணில் உரமானவனே. எண்ணற்ற நினைவுகளில். சாதிக்க போராடி போராடி நின்றவனே

தாயக்க் கனவுடன்சாவினை தழுவிய மாவீரனே
வீரக் காவிய நாயகர்களாக மரணித்தவனே
தமிழ் மண்ணிற்காக போராடி சாவை வென்றவனே
உங்கள் கனவு நனவாகும் வரை தமிழ் இனம் உறங்காது
எம் காலம் வரை உங்கள் நினைவு என்றும் மறவாது

Nada Mohan
Author: Nada Mohan