” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-241
தீப ஒளியே
———————
அகிலத்தில் ஒளி தர பிறக்கும் தீப ஒளியே
ஆதவன் உதிப்பில் கதிராக ஒளியே
இருளை அகற்றிடும் விளக்கு ஒளியே
ஈசல் தேடி மடியும் லாம்பு ஒளியே
உலகத்தை அளித்திடும் மின்னல் ஒளியே
ஊற வைத்து கறி சமைக்க பழப் புளியே
எண்ணிலடங்கா தமிழர்களின் தீப ஒளியே
ஏற்றத்தை உண்டு பண்ணும் கல்வி ஒளியே
ஐயத்தை உண்டு பண்ணும் சந்தேகப் பேரொளியே
ஒவ்வாமை உண்டு பண்ணும் உடம்பில் மாற்றொளியே
ஒயாது உழைத்து உயர வைக்கும் வளியே
ஒளவை அம்மையாரின் அமுத வாய்மொழியே
அகேனம் எனும் ஆயுத எழுத்தால் ஒளிரட்டும் தீப ஒளியே
ஜெயா நடேசன் யாழ்

Nada Mohan
Author: Nada Mohan