” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -09.01.2024
இலக்கம்-248
வசந்தத்தில் ஓர் நாள்
———————-
வசந்த கால நிலையிலே
வந்ததே அற்புத நினைவுகள்
பாரினிலே நீங்காத நினைவலைகள்
கண்டி மாநகரிலே
பச்சை பசேலென மரம் செடி கொடிகள்
பச்சை கம்பளம் விரித்தாற்போல் வயல் வெளிகள்
வண்ண வண்ண நிறங்களில் மலர்த் தோட்டங்கள்
வண்டுகள் இசை பாடி் திரிந்த காட்சிகள்
கள் உண்ட தேனீக்கள் மயங்கிய தாக்கங்கள்
கண்டி பெரகராவில் யானை அழகுற பார்த்த மகிழ்வுகள்
கண்டி நடன அற்புத காட்சிகள்
மகாவலி ந்தியினிலே முத்துமணி நீரலைகள்
மலையிலே நடந்து சென்ற நினைவலைகள்
வேலைக்கு போக பனியிலே குளித்து நனைந்த நினைவலைகள்
பருவங்கள மாறி பக்குவமான வசந்தகால
நினைவுகள் கனவுகளாய் வந்த நிலையில்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan