ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -09.01.2024
இலக்கம்-248
வசந்தத்தில் ஓர் நாள்
———————-
வசந்த கால நிலையிலே
வந்ததே அற்புத நினைவுகள்
பாரினிலே நீங்காத நினைவலைகள்
கண்டி மாநகரிலே
பச்சை பசேலென மரம் செடி கொடிகள்
பச்சை கம்பளம் விரித்தாற்போல் வயல் வெளிகள்
வண்ண வண்ண நிறங்களில் மலர்த் தோட்டங்கள்
வண்டுகள் இசை பாடி் திரிந்த காட்சிகள்
கள் உண்ட தேனீக்கள் மயங்கிய தாக்கங்கள்
கண்டி பெரகராவில் யானை அழகுற பார்த்த மகிழ்வுகள்
கண்டி நடன அற்புத காட்சிகள்
மகாவலி ந்தியினிலே முத்துமணி நீரலைகள்
மலையிலே நடந்து சென்ற நினைவலைகள்
வேலைக்கு போக பனியிலே குளித்து நனைந்த நினைவலைகள்
பருவங்கள மாறி பக்குவமான வசந்தகால
நினைவுகள் கனவுகளாய் வந்த நிலையில்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading