ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-15.10.2024
கவி இலக்கம்-283
“பெருச்சாளி”
—————
வயல் பொந்திலே பல
பெருச்சாளிகள் ஒளித்து இருக்கும்
பொறி வைத்து பிடித்து
சாப்பிடுவரும் உண்டு
தாயகத்திலே அரசியல் பெருச்சாளிகள் பணத்தோடு பல கண்டு
சொகுசான வாழ்க்கை
முடங்கியது இண்டு. உண்டு உறங்கிய மாளிகைகள்
திரும்ப கொடுக்க கண்டு. இன்றைய ஆட்சியின் சட்ட திட்டங்கள் பல உண்டு
நீதி நேர்மையில் பொறி வைத்தார் நிண்டு. உலக தலைவர்களே அதிரப் போட்டாரு பலவித குண்டு. ஊழல்கள் யாவும் கிளறி விட்டாரு துண்டு
பெருச்சாளிகள் ஓடி ஒதுங்க முடியாது வைத்தாரு ஆப்பு
சூப்பு போட பெருச்சாளிகளை தேடினானே சீன்ன் இண்டு
வீட்டுப் பொந்திலே குடும்பமாக ஒளிந்தனரே பயந்து கண்டு. தமிழினம் பட்ட துன்பங்கள் அறிந்து
நீதி தேவதை நியாய செயலால் மலரும் எண்டு
இலங்கையை விட்டு பெருச்சாளிகள் எப்போது தொலைகின்றரோ
கள்ள பெருச்சாளிகள்
கொள்ளையடித்த பணமும் சேரும்
வயலும் பயிரினால் விவசாயம் சிறக்கும்
நாடும் வளமாக மாற்றம் பெறும் சுதந்திரக் காற்றும் வீசும்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading