இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : தியாகமே தீர்ப்பானதா

சிறக்கடிக்கும் பருவம்
சிகரத்தை தொட்டு விடும் துடிப்புள்ள விடா முயற்சி
சுற்றுகின்ற பூமியை
சுற்றி விட சீர்கொண்ட
பாதை வழி
வீரமுள்ள தலை முறை தான்

தாய் நிலத்தை நேசித் தார்
தம் சுகமனைத்தும்
தான் துறந்தார்
சுதந்திர வேள்வித்
தீயினிலே நெய்யாகத்
தான் கரைந்தார்
தன் மானம் தலை நிமிர
தாய் மண்ணில் விதையானர்
தார்மிக நிலை மறந்த
வலுவான வல்லரசு
வஞ்சகமாய் வலை விரித்தத்தார்
நம் சுதந்திரத்தை தீயிட்டார்

நீறாக எரிகின்ற தாகத்தை தனிப்பதற்கு
தியாகமே தீர்ப்பாக
விடுதலைக்காய் தவமனோம்!!!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading