சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி :
“கைக்குள் கையாய் கை தொலை பேசி”

கைக்குள்ளே உலகை
தந்து நிற்பாய்
நம் காரிய நகர்விற்கு
தொழில் நுட்ப தூரிகை ஆனாய்

இடை வெளி குறைத்திடும்
பாலமாய் நின்று
உறவுடன் உலா வரும்
காற்றலை ஆனாய்

நமக்கு நாமே நம்பிக்கை
கொண்ட புத்தகம் ஆனாய்
நாள் தோறும் துயில் எழும்
சூரியன் ஆனாய்

வரவு எட்டு செலவு பத்தென
அறிந்து கொண்ட
பொழுதைப் போக்க புன்னகை வீசும்
முகத்திரை ஆனாய்

போவது போகட்டும்
ஆறிலும் பத்திலும் சாவு நிச்சயம்
இடை வெளி வாழ்வினில்

கைக்குள் கையாள தொலை பேசியே
வழித்துணை கைத்தடி ஆனது

Nada Mohan
Author: Nada Mohan