இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : நினைப்பு அது நெருப்பு

நிலா முற்ற கொட்டில்
குழை சாத கவளம்
கை முந்தி முழுங்கும்
தொண்டைக்குள் தாகம்

செலவில்லாத வரவு
தலை வருடி வளர்த்த
தாய் இன்று இல்லை அவர்
தலை முறையின் உயிர்ப்பு
உயர்ந்து நிற்கும் நிலை காண

உறவுகளின் சபையில்
ஓரமான இருப்பு
ஓரக்கண்ணில் கசிந்த
ஈரமான நெருப்பு

சூழலோடு நகர்ந்து
சுமந்து கொண்ட படிப்பு
இலட்சியத்தை தொட்டு நிற்கும்
இன்பமான வீடு!!!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading