தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி முதல் ஒலி உறவுகள்
தங்கசாமி தவக்குமார் 20.04.2023

புலம் பெயர் உறவுகளை
தக்கப்படி சேர்த்து கோர்த்து
FA முகமாய் மலர்வு கண்ட
முதல் ஒலி உடகமாம்
London Tamil வானொலியே
நம் முதல் ஒலியே

தாய் மொழி காவி
தளர்விலா பணி நகர்வில்
பல பக்கப் பார்வையிலே
பரிணாமம் கொண்டு
பவனிவரும் நம் ஒலியே

அன்று தொட்டு இன்று வரை
இணைவு கண்டு
நீங்காத நினைவலைகளை
மீட்டி பார்க்கும் நிகழ்வாய்
ஓர் மகுடம் முதல் ஒலி உறவு

மான்புமிகு அதிபர் பணிக்கு
ஆரவார ஆனந்த படிவு
அற்புதமாய் வார 11ஐ
கண்டிருக்கும் மலர்வுக்கு வாழ்த்து

தொகுத்து தரும் தூரிகைக்கு
மன மகிழ்வாய் வாழ்த்தும் நன்றியும்

வியாழன் கவி : வளர்ந்த குழந்தைகள் தாமே
27/04/2023

கள்ளமில்லா உள்ளம் கொண்ட
வள்ளல் ஆனவர்
மாசுபடா உறவு தனை
வாரி கொடுப்பவர்

நாளை வரும் பொழுதுகளை
மறந்து என்றுமே
புத்தம் புது மலர்களை போல்
பொலிவு கொண்டவர்

அடம் பிடிக்கும் ஆற்றலோடு
பிறர் மனதில் வாழ்பவர்
என்றும் இவர் இறை ஈர்ந்த
வளர்ந்த குழந்தைகள்
நம் கைகளிலே தாங்கி
கொள்ள வலிமை வேண்டுவோம்
அவர் வலிமை வேண்டுவோம்!!!

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading