அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

தடமது படைத்தெழும் தனித்துவம்

சுமித்ரா தேவி (மித்திரா

கவிதை இலக்கம் 15
தலைப்பு தடமது படைத்தெழும் தனித்துவம்

திடமது தந்திடும் மனமதில்
கடமென ஒலித்திடும் இசையது
மடையென உடைத்தெழும்
நீர் நிலை-நம்
மனமது கழித்திடும் அன்பது
நிறமுடன் கற்றவை அறம் ஆவதும்
வரம் என பெற்றவர் வாழ்விலே-அவர்
தடமென விளைவதுதான்
உணர் கண்டதே
படமென விரிவதும்
பார் எமை அணைப்பதும்
தடமென படைத்தெழும் தனித்துவமே
சுமித்ரா தேவி (மித்திரா)
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading