தண்ணீருக்காய்திரளும்போர் மேகங்கள்

செல்வி நித்தியானந்தன்
தண்ணீருக்காய்திரளும்போர் மேகங்கள் (755) 26.03.2026
:உயிரின் அவசியம்
உலகில் என்று
உன்னத தேவையாய்
நித்தியம் நன்று
உயிரிடை மருந்தாய்
பலருக்கு இன்று
உலகில் கிடைப்பதும்
அதீத ஒன்று

:கோடை வந்தாலே
நீருக்கு பஞ்சம்
ஜாடை காட்டி
நடைபயண தஞ்சம்
பீடை பிடித்திடும்
உயிரின் இழப்பு
வாடை வந்திடும்
நீரின்றி பிழைப்பு

நீருக்காய் மேகமும்
திரண்டு வரவே
வேகமாய் மண்ணிலே
மழையாய் பொழியவே
தாகமாய் உயிர்களும்
பருகி மகிழவே
தந்ததே மனதினில்
மகிழ்வும் வந்திட

கருவறை காத்திடவும்
கல்லறை கட்டிடவும்
நீரின்றி அமையாத
இவ்வுலகு.உண்டோ

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading