தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-01-2026

சுற்றியிருக்கும் இருள்
சூறையாட நினைத்தால்
துணிவெனும் தீச்சுவாலை
கொழுந்து விட்டெரியட்டும்!

விழுந்தால் எழுவாய்
விதிதனை வெல்வாய்
விடியும் என்றே
வலிதனை முகிழ்வாய்

கால்கள் சோர்ந்தால்
கனவுகளைத் துணையாக்கு
கண்ணீர் வழிந்தால்
கடமையை நினைவாக்கு

இடி விழும் வேளையிலும்
இதயத்தின் பிடி தளராதே
தன்னம்பிக்கை ஒளி கண்டு
தளர்ந்திடுமே துயர் நிழல்

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading