தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-01-2026

சுற்றியிருக்கும் இருள்
சூறையாட நினைத்தால்
துணிவெனும் தீச்சுவாலை
கொழுந்து விட்டெரியட்டும்!

விழுந்தால் எழுவாய்
விதிதனை வெல்வாய்
விடியும் என்றே
வலிதனை முகிழ்வாய்

கால்கள் சோர்ந்தால்
கனவுகளைத் துணையாக்கு
கண்ணீர் வழிந்தால்
கடமையை நினைவாக்கு

இடி விழும் வேளையிலும்
இதயத்தின் பிடி தளராதே
தன்னம்பிக்கை ஒளி கண்டு
தளர்ந்திடுமே துயர் நிழல்

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading