சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

தமிழும் பாரதியும்

ரஜனி அன்ரன்

“ தமிழும் பாரதியும் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.09.2024

தமிழும் பாரதியும் பாரதியும் தமிழும்
பிரிக்க முடியாப் பிணைப்புக்கள்
தமிழ் தமிழ்ப்புலமை
தமிழ்ச் சொல்லின் பெருமை பேசிய கவிஞன்
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்து
தேசமெல்லாம் தமிழோசையை
ஒலிக்கவிட்ட உணர்ச்சிக் கவிஞன் பாரதி !

தமிழன்னையின் தவப்புதல்வனாகி
தமிழுக்கு தந்தையென மகுடம் சூடி
தித்திக்கும் தேனாகத் தமிழைச் சுவைத்து
தெவிட்டாத இன்பத் தமிழைப் பருகி
தமிழ் வார்த்தையால் யுத்தம் செய்து
தமிழை நேசித்து சுவாசித்த கவிஞன் பாரதி !

தெளிவு கொண்ட பாரதியின் தமிழே
தெய்வமகன் பாரதியின் மொழி
விடுதலைக் கோடியில் பாடல் எழுதி
விடியல்க் கீதத்தை கூவிய குயில்
தமிழினத்தின் இருளினை நீக்கிட
ஒளி வீசிட வைத்த சூரியன் !

புதிய உலகைத் திறக்க
நவீன கவிதைக்கு அடித்தளமிட்டு
கவியுலகச் சக்கரவர்த்தியாகி
கவியுலகை ஆட்சி செய்த பாரதி
புவியுலகையும் வென்றான் கவியாலே
பாரதி இல்லையேல் தமிழும் இல்லை
பாரதியும் தமிழும் என்றும் நின்று நிலைக்கும் !

Nada Mohan
Author: Nada Mohan