தமிழ் 101

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026

உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய் வளர்த்தவளே
முதியோர்க்கு மரியாதை புகுத்தவளே

தேனினும் இனிய செம்மொழியே
தெவிட்டாமல் நாவுரைக்கும் மொழியே!
அலையாய் சோதனை கண்டாலும்
அசையாது நின்ற பாறை நீ

பாறையில் செதுக்கியவை அழியாமல்
ஏட்டினில் எழுதியவை கரையாமல்
பலநூறு ஆண்டுப் பழமை பொருந்தி.
பாரெல்லாம் சிறந்து விளங்குகின்றாயே

உள்ளம் உருகிய பாடலுக்கு
உணர்வாய் உயர்ந்து நின்றாய்
புவியெங்கும் பரவி நீ
புதியவோர் உலகம் படைக்கின்றாயே!

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading