திங்கள்

அங்கே வான் முகட்டில் ஆடும் வெள்ளிக்கிண்ணம்
இங்கே கவிதை வடிக்க மனம் எண்ணும்
பாதைகளை எரித்து சென்று மறைவான் ஆதவன்
காதலிக்க இரவின் ஒளியில் நிலவே தூதுவன்

மேகப் போர்வையை விலத்தி வெள்ளித் தட்டு
மோகம் கொண்ட கவிஞனுக்கு அழகின் சொட்டு
இரவின் நிழலில் நிலவெனும் அற்புத ஓவியம்
வறுமையில்லா வனப்புடன் நகருதே திங்களின் சீவியம்

குறையாய் பிறந்தாலும்
முழுமை நோக்கி வளர்வது
நிறைவான வாழ்க்கைத் தத்துவமாக மானிடர்க்கு மிளிர்வது
மறையும் வரை வீசும் மங்காத அழகு,
விரைந்து சென்றிடாதேயென பரிதவிக்கும் இரவின் உலகு

ஜெயம்
24-01-2026

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading