திசைகாட்டிகள்.

சிவருபன் சர்வேஸ்வரி

திசைகாட்டிகள்.

அன்பொடு அகரவரிசையில் ஆசையுடன் அணைத்து

அம்மா அப்பாவென அருட்கொடையை ஊட்டி

வண்ணமாகவும் வளமாக வரமுறையில் கற்பித்து

திண்ணமாக தரமாக தீர்க்கமாக மனதிலே

தெள்ளத் தெளியவைக்கும் திசைகாட்டிகளே வாழ்க

நன்னெறி வழிகாட்டி நல்நிலை தனைச்சேர்த்து

பலவழிகள் புரியவைக்கும் பண்பாளர்கள் நீவீர்

ஆடலுடன் பாடலும் அபிநயமும் விளையாட்டாய்

அகத்திலே ஏற்றவும் அரும்பாடு பட்டுமிங்கு

விளைநிலத்தைப் பதமாக்கி விதைப்பது போன்று

கல்வியென்னும் பயிர்வளரக் கவனிப்பாய் நின்றொழுகும்

கலைநிறைக் குருவே வாழி வாழி வாழியவே

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading