” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திசைகாட்டிகள்.

சிவருபன் சர்வேஸ்வரி

திசைகாட்டிகள்.

அன்பொடு அகரவரிசையில் ஆசையுடன் அணைத்து

அம்மா அப்பாவென அருட்கொடையை ஊட்டி

வண்ணமாகவும் வளமாக வரமுறையில் கற்பித்து

திண்ணமாக தரமாக தீர்க்கமாக மனதிலே

தெள்ளத் தெளியவைக்கும் திசைகாட்டிகளே வாழ்க

நன்னெறி வழிகாட்டி நல்நிலை தனைச்சேர்த்து

பலவழிகள் புரியவைக்கும் பண்பாளர்கள் நீவீர்

ஆடலுடன் பாடலும் அபிநயமும் விளையாட்டாய்

அகத்திலே ஏற்றவும் அரும்பாடு பட்டுமிங்கு

விளைநிலத்தைப் பதமாக்கி விதைப்பது போன்று

கல்வியென்னும் பயிர்வளரக் கவனிப்பாய் நின்றொழுகும்

கலைநிறைக் குருவே வாழி வாழி வாழியவே

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan