ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

திசை மாறும் பறவைகள்

ராணி சம்பந்தர்

உணவுப் பசியுமதிலே
குளிர் விறைப்புமதில்
தங்கியும் விடியாததில்
தாங்கவும் முடியாததில்
பொங்கி எழுந்து தஞ்சம்
கோரிட வெகு தூரமே
புரிந்து பறக்கின்றன

வானிலே பறக்கையிலே
இடையில் நிற்கவே சக்தி
இன்றி மெலிந்து இறக்கை
சோர முனகி முனகிப் பின்
குரல் மெல்லிசை பிறக்க

அம்மா நில்லுங்கோ நில்லுங்கோ
அப்பா சொல்லுங்கோ கேளுங்கோ
கீச்சுக்குரல் மூச்சிட திரும்பி வந்தே
வட்டமிட்டு விரைவாகக் கூடிடவே
திட்டமிட்டு நிரையாகச் செல்லும்
அழகு சிறகு விரிக்கும் வடிவமும்

திரிக்கும் குரல் பார்க்கும் கண்ணை
வான்வெளியில் எங்கே எனத் தேடித்
தேடித் திரும்பிப் பார்க்க வைக்கும்
அழகு திசை மாறும் பறவைகளிலே.

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading