இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

தியாகராஜா யோகேஸ்வரன் – ஓமான்.

சித்திரை வந்தாலே..!

சித்திரையில், சித்ரா பௌணர்மி, பந்தபாசம் தந்தது. பங்குனி கடந்து சென்றாய், வைகாசி முன்னர், சித்திரையாக பிறந்தாய்,
பன்னிரு மாதங்களில் சிறப்பாய் முப்பது தினங்கள் கொண்டாய். புது வருடம் பொங்கி வரும் ஆசிகள் தந்தாய்.
சித்திரை கொண்டாட்ட விடுமுறைகள் தந்தாய். புத்தாடை அணிந்திட முன்னர், மருத்து நீராடச்சொல்லி பணித்தாய்..
ஆலய மணியோசை அழைத்திடும், ஆன்மாவும் சிந்தையில் லயித்திடும், பக்தி பரவசத்தில் தரிசனம், சக்தி கொடுக்கும் மகிமையது..
உறவுகள் கூடிடும், விருந்துகள் சிறந்திடும், எண்ணப்பறவைகள் பறந்திடும், வண்ணக்கோல ஆடைகள் அணிந்திடும்
வசந்த கால கோலங்கள், இசைந்த ஞான தீபங்கள், புதிய எண்ண உதயங்கள், சித்திரை பூம்பாவை பூத்தாரே..!

– தியாகராஜா யோகேஸ்வரன் – ஓமான்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading