சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

தியாகராஜா யோகேஸ்வரன் – ஓமான்.

சித்திரை வந்தாலே..!

சித்திரையில், சித்ரா பௌணர்மி, பந்தபாசம் தந்தது. பங்குனி கடந்து சென்றாய், வைகாசி முன்னர், சித்திரையாக பிறந்தாய்,
பன்னிரு மாதங்களில் சிறப்பாய் முப்பது தினங்கள் கொண்டாய். புது வருடம் பொங்கி வரும் ஆசிகள் தந்தாய்.
சித்திரை கொண்டாட்ட விடுமுறைகள் தந்தாய். புத்தாடை அணிந்திட முன்னர், மருத்து நீராடச்சொல்லி பணித்தாய்..
ஆலய மணியோசை அழைத்திடும், ஆன்மாவும் சிந்தையில் லயித்திடும், பக்தி பரவசத்தில் தரிசனம், சக்தி கொடுக்கும் மகிமையது..
உறவுகள் கூடிடும், விருந்துகள் சிறந்திடும், எண்ணப்பறவைகள் பறந்திடும், வண்ணக்கோல ஆடைகள் அணிந்திடும்
வசந்த கால கோலங்கள், இசைந்த ஞான தீபங்கள், புதிய எண்ண உதயங்கள், சித்திரை பூம்பாவை பூத்தாரே..!

– தியாகராஜா யோகேஸ்வரன் – ஓமான்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading