நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நட்பென்றாலே!

நகுலா சிவநாதன் நட்பென்றாலே!1 நட்பே உறவின் முதல்நாடி நாடுவதும் அதுவே நிறைநாடி உப்பாய் நட்பு உயர்ந்திட்டால் உலகில் ஒற்றுமை நிலைத்திருக்கும் நட்பின்...

Continue reading

தியாக மைந்தன் திலீபன்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-36

26-09-2024

தியாக மைந்தன் திலீபன்

மக்களின் விடிவிற்காய்
மனிதநேயம் கொண்டு
உண்ணா நோன்போடு
உயிர்நீத்த மைந்தனே!

காக்கைக்கு உணவளித்து
கடும் விரதம் புரிபவரும்
இறந்தவர்க்கு திதி செய்து
இதயம் நிறைபவரும்

வாழ்ந்த எம் பூமியில்
வயிற்றுப் பசி கொண்டு
தீபமாய் உருகி கருகி
தீர்த்தாயே தியாகியே!

உலகமே உற்று நோக்கி
ஊமையாய்ப் போனதே
உன்கனவு விரைவில் மலரும்
ஊரெழு உத்தமனே!

இனத்திற்காய் வாழ்ந்தோரை
இதயத்தால் வாழ்த்திடுவோம்
இவர்கள் தியாகத்தை
இருகரம் கூப்பி வணங்கிடுவோம்.

நன்றி வணக்கம்.
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan