திருமணமாம்

சந்த கவி
இலக்கம்_182
சிவாஜினி சிறிதரன்

“திருமணமாம்”
இருமனம் இணைந்து
ஒருமனதாகி
இன்னாள் நன்னாள்
பொன்னாள்
புனித நாள்!

உள்ளத்தை
உறவாக்கி
தாலியை வேலியாக்கி
அன்பினால்
மாளிகை கட்டி
புன்னகையால் குடிபுகுந்து !

அழகான அன்பு பூந்தோட்டம்
ஆனந்த புன்னகை தேரோட்டம்
இன்ப தேன் எங்கும் சிந்தட்டும்
ஈங்கு உவகை பொங்கட்டும்!

முதுமை வந்த போதும்
இளமையாகட்டும் காதல்
முடிநரைத்த போதும்
இனிமையாகட்டும் வாழ்க்கை!

நன்றி
வணக்கம்
08.03.25

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading