திருமணமாம்

சந்த கவி
இலக்கம்_182
சிவாஜினி சிறிதரன்

“திருமணமாம்”
இருமனம் இணைந்து
ஒருமனதாகி
இன்னாள் நன்னாள்
பொன்னாள்
புனித நாள்!

உள்ளத்தை
உறவாக்கி
தாலியை வேலியாக்கி
அன்பினால்
மாளிகை கட்டி
புன்னகையால் குடிபுகுந்து !

அழகான அன்பு பூந்தோட்டம்
ஆனந்த புன்னகை தேரோட்டம்
இன்ப தேன் எங்கும் சிந்தட்டும்
ஈங்கு உவகை பொங்கட்டும்!

முதுமை வந்த போதும்
இளமையாகட்டும் காதல்
முடிநரைத்த போதும்
இனிமையாகட்டும் வாழ்க்கை!

நன்றி
வணக்கம்
08.03.25

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading