பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

09.06.2022

“அன்றிட்ட தீ நிழலாடும் நினைவுகள்”

அன்றிட்ட தீ நிழலாடும் நினைவுகள்
தோன்றிட நெஞ்சினில் துளைக்குதே இதயத்தை
அறிஞர்களின் போதிமரம் அறிவுப்பெட்டகம் யாழ்நகர்
அறியாமையின் இருள்களைந்த அகல்தீபம் நூலகம்

வாசிப்பு விதைதூவி விருட்சமான கல்விக்கூடம்
நேசிப்போர் நெஞ்சத்தில் நிறைந்திட்ட கலைக்கூடம்
இல்லத்து நூலகம் இலங்கை நூலகம் சொல்வலிமை
பிறப்பெடுத்து சோலையான தமிழ் வனம்

சோலைவன மலர்த்தோட்டம் சோதனையின்
உயிரோட்டம்
பாலைவனமாய் எரியூட்டப்பட்டு பாலில்நஞ்சு கலந்தநாள்
தமிழகநூலகம் எரிப்புநாள் தமிழர்களின இதயம்பிழப்புநாள்
அமிழ்துமொழி அழகுதமிழ் அன்னைமொழி இழப்புநாள்

கல்லறையான தமிழரின் கரைபடிந்த காவியம்
இல்லறமும் எரிந்துபோனதாய் இதயவேதனை ஓவியம்
கலைக் களஞ்சியமான கல்விச் சாலை
கல்லறையான காட்சிதோற்றம்
விலையென்ன கொடுத்தாலும் வாங்க முடியாவாணிபம்

நிகழ்வை நேரில்கண்டு நெஞ்சம் பொறுக்காது
அகம்நொந்து உயிர்விட்டடு
அணைந்த உன்னதரும் உண்டு
சிங்கள பேரழிவுக்கார சினவேட்டை
கொடுமை
அங்கம் நடுங்கும் அழிப்புதினம் தொடக்கம்
எங்கே நல்லநூல்கள் எரிக்கப் படுகின்றனவோ
அங்கே நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்

படிப் படியான அடுக்குமாடி பாழ்பட்ட போராட்டம்
துடிதுடிக்க கருகிமாண்டு துன்பம் கண்ட இருண்டகாலம்
மீண்டும் மீண்டும் மாண்டெழுந்து் மடிந்தன
அண்டாண்டு ஆவணங்கள் அழிந்து ஒழிந்தன

அடையாள தமிழரின் அழிப்பு யாழ்நூலகம்
விடைபெற முடியாது விதிபோட்ட தாளது
விதைக்கப்பட்ட வித்துகள் விருட்சம் சாம்பலாகி
புதைக்கப்பட்ட உயிரிழப்பு புன்னகைஇழப்புநாள்

கலைமகள் கல்விதாயின்
கலைக்கோபுரம் கரிகியநாள்
சிலையாகி தமிழர்கள் சிறகொடிந்து துடித்தனர்
ஆராதவடுவான அடையாளஅழிப்பு நாள்
தீராத துன்பங்கள் தீவினை சூழ்ந்தநாள்

நன்றி வணக்கம்🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading