திருமதி. அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-223 – 23.05.2023

பதினெட்டு வைகாசி முள்ளிவாய்க்கால்
பல்லுயிரை பலிகொண்ட விசவாய்க்கால்

சதிசெய்து தமிழினத்தை அழித்தநாள்
சந்ததியே இல்லாமல் ஒழித்தநாள்

விதியாகி வெடிமருந்தில் சிதறிடவே
விலையாக உயிர்களும் இறைந்தனவே

கதியற்று கருமருந்தால் பொசிந்திடவே
கனப்பொழுதில் கரியாக்கி குவித்திடவே

இதிகாச வரலாற்றில் இதுவோர்
இனஅழிப்பு தினமாக பதிவிட்டோர்

நதியாகி குருதியும் ஓடியதே
நயவஞ்சர் வெற்றிகோசம் பாடியதே

பதியிழந்த மனைவிகளாய் பலருண்டு
பட்டமர வாழ்ககையாய் பாவியுண்டு /

அபிராமி (கவிதன் )

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading