” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

21.06.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு ..
வாரம் -178 /

தலைப்பு !
“தந்தைக்கோர் தாலாட்டு”
( வெண்செந்துறை )

ஆராரோ பாடுகிறேன்
அப்பா கண்ணுறங்க
சீராட்டி வளர்த்தஎன்
செல்லமே கண்ணுறங்க //

தாயாக மாறிநான்
தாலாட்டு பாடிடவா
நோயாலே வீழ்ந்தீரே
நோன்பிருந்து தேற்றிடவா //

மாத்திரை விழுங்கவைத்து
மடிமீது தாங்கிடவா
காத்திருந்து கண்விழித்து
கருமவினை போக்கிடவா //

உடம்பெல்லாம் வலிக்கிறதா
ஒத்தடம் வைத்திடவா
படபடக்கும் இதயத்துக்கு
பணிவிடை நான்செய்திடவா //

தள்ளாடும்்வயதினிலே
தூணாக இருந்திடவா
உள்ளன்பை உணர்ந்துநான்
உரையாட வந்திடவா //

படுக்கையிலே என்தந்தை
பார்ப்பதற்கு முடியலையே
உடலிங்கு இருக்கிறது
உள்ளமெண்ணி துடிக்கிறது //

அருகினில் இருந்திருந்தால்
அத்துனையும் செய்திருப்பேன்
உருகியே புலம்புகிறேன்
உள்ளுக்குள் அழுகின்றேன் //
———————————————-
கவிப் பார்வைக்கும்
தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும்
தங்கள் பெரும்பணிக்கும் என்மனமார்ந்த நனிமிகுந்த நன்றிகள்.
நன்றி நன்றி பாவை அண்ணா🙏
அதிபர் அவர்களுக்கும் நன்றி.
வாழ்க வளமுடன் 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading