திருமதி. அபிராமி.

09.05.2023

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -221
தலைப்பு ! ( அறுசீர்விருத்தம் )
“காணி”
வனமது தாயக காணி
வளமும் நிறைந்த பூமி //

தனமது கையிலும் இல்லை
தங்கவோர் இடமில்லா தொல்லை

இனத்தவர் சிலரும் சேர்ந்து
இரவுபகல் விட்டினர் சோர்ந்து

கனத்த உழைப்பின் பாணி
கண்ணில் பட்டது காணி

வெட்டிய காணியின் வீடு
வேதனை நிறைந்த கூடு

பட்டினி பஞ்சம் ஊடே
பணியின்றி தவித்தது நாடே

கட்டிய கனவுக் கோட்டை
கரைந்தது உயிர்பலி வேட்டை

விட்டுப் பிரிந்தோம் நாட்டை
விடிவுவரை விடைகொடுக்க
மாட்டோம் //

கவித்திறனாய்வு மிகமிக நேர்த்தி.
போற்றுதல் பாராட்டுக்கள் பாவை அண்ணா…🙏🏻மற்றும் .. கவிஞர் பாலரவி அவர்களுக்கும்🙏🏻

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading