திருமதி .கலாதேவி பத்மநாதன்.

28.02.2023.
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவி வாரம் -212
தலைப்பு !
“ மொழி “

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்

என்பதாலோ என்னவோ என் மொழி என்னுள் நிரந்தரமில்லை …

நானறிந்து பயின்றமொழி என்தாய் மொழி– தமிழ்…

நாளடைவில் நட்பு கொண்டு அறிந்த
அந்நிய மொழி– ஆங்கிலம் ..

கற்பிக்க சென்ற இடம் எனக்கு கற்பித்த பாரத மொழி– ஹிந்தி ..

அன்னை தந்தை அவ்வப்போது உறையாடக் கேட்டறிந்த மொழி _ சிங்களம்..

இத்துனை இருந்தும்
ஏனோநான் இரவல் மொழி …

நிரந்தரமில்லா என் இருப்பிடமொழி எதுவோ…..

ஈழத் தாயக பிரசை நான்
இந்திய தமிழகத்தின் அகதி நான்

நன்றிகள் . பாவை அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading