திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன்
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*மணி*

குப்பையிலே மின்னுவதோ
குண்டுமணி

உப்புவளர் கடல் தருமே
முத்துமணி

நெற்கதிரில் மிளிருமந்த நெல்மணி

கற்றிட இணைவாகும்
கண்மணி

கதிர் எழும்முன் எமையெழுப்பும் காண்டாமணி

துதிக்கும்பெண் ஒளிர்விப்பாள் தூண்டாமணி

நங்கையவள் அணிகளிலோ நவமணி

கருக்கவிகள் நமக்களித்தார் கவிமணி

மணிகளதும் மண்ணினிலே பலவிதம்
மகிழ்விக்கும் அதுதானே
அனுதினம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading