” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
இல 18

*இலக்கு*

ஒற்றுமை ஓங்கிடல் வேண்டும்
ஒன்றாகி நின்றிடல் வேண்டும்
பற்றுடன் வாழ்ந்திடல் வேண்டும்
பல்கலை வளர்த்திடல் வேண்டும்

கற்றுணர்வு பெருக்கிடல் வேண்டும்
கருணையை காட்டிடல் வேண்டும்
முற்றும் முயன்றிடல் வேண்டும்
முழுமைக்கும் உழைத்திடல் வேண்டும்

நற்றவம் இயற்றிடல் வேண்டும்
நன்னெறி ஒழுகிடல் வேண்டும்
மற்றுயிர் மதித்திடல் வேண்டும்
மண்வளம் காத்திடல் வேண்டும்

பெற்றோரை காத்திடல் வேண்டும்
பெரியோரை மதித்திடல் வேண்டும்
உற்றோர்க்கு உதவிடல் வேண்டும்
உறவைப் பேணுதல் வேண்டும் .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading