நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

* தொழிலாழி *
மழைகாணா மண்ணிற்கு மகிழ்வுண்டோ
அழையாத விழாவிற்கும் அழகுண்டோ
தழைக்காத வாழ்வாலே தயவுண்டோ
உழைக்காத உலகாலே உயர்வுண்டோ

பழிக்காத வாழ்விற்கு தொழிலாளி
வழிதேடி வருகின்றான் தொழில் தேடி
ஒழிக்காமல் ஓயாமல் உழைக்கின்றான்
அழியாமல் காத்திடப்பா முதலாளி

உண்மையாய் உழைக்கும் உத்தமனால்
உலகமும் வாழுதப்பா நித்தமுமாய்
கண்ணாக காத்திடப்பா காலமெல்லாம்
கருமணியும் அவனன்றோ காசினியில்

உருக்கொள்ளும் அவன் உதிரம் உறிஞ்சலாமோ
தெருக்கோடியில் அவனை தொலைக்கவாமோ
வருங்கால வாழ்வின்றி வதைக்கலாமோ
அரும்பொருளாம் அவனையுமே அழிக்கலாமோ

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கார்த்திகை இருபத்தியேழு... கணதியின் ரணமாய் கங்கையில் விழியாய் கோரமே நினைவாய் கொன்றழிப்புகள் நிதமாய் வலிகளைச் சுமந்திட்ட வரலாற்று இனமே கார்த்திகை...

    Continue reading