மொழியே என் முகவரி..!!(2390)

மொழிதனை இயம்பிட்ட மழலைகளாய் நாம், தாய்மொழிதனை கேட்டு கருவறையில் கண்ணுறங்கும் போதே கற்றிட்ட சிசுக்களாய் நாம்! இவ்வுலகில் அவதரித்த பொழுதினிலே, “அம்மா” என்ற மூன்றெழுத்து...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

* தொழிலாழி *
மழைகாணா மண்ணிற்கு மகிழ்வுண்டோ
அழையாத விழாவிற்கும் அழகுண்டோ
தழைக்காத வாழ்வாலே தயவுண்டோ
உழைக்காத உலகாலே உயர்வுண்டோ

பழிக்காத வாழ்விற்கு தொழிலாளி
வழிதேடி வருகின்றான் தொழில் தேடி
ஒழிக்காமல் ஓயாமல் உழைக்கின்றான்
அழியாமல் காத்திடப்பா முதலாளி

உண்மையாய் உழைக்கும் உத்தமனால்
உலகமும் வாழுதப்பா நித்தமுமாய்
கண்ணாக காத்திடப்பா காலமெல்லாம்
கருமணியும் அவனன்றோ காசினியில்

உருக்கொள்ளும் அவன் உதிரம் உறிஞ்சலாமோ
தெருக்கோடியில் அவனை தொலைக்கவாமோ
வருங்கால வாழ்வின்றி வதைக்கலாமோ
அரும்பொருளாம் அவனையுமே அழிக்கலாமோ

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading