இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சித்தும் சந்திப்பு – 224

தலைப்பு – மூண்ட தீ

வேண்டுவோர்க்கு ஒளிகொடுத்து வாழவைத்த ஒளியகத்தை
வேண்டுமென்று தீமூட்டி வீழ்த்திய மூடர்களை
ஆண்டவனே அறியாயோ ஏனென்று கேளாயோ
மீண்டும் நாசங்கள் முளைக்காது நசிக்காயோ.

மாதங்கள் ஆண்டுகளாய் மறைந்து சென்றாலும்
வேதனைகள் வேர்விட்டு வாட்டத்தை வளர்க்கிறது
ஆதங்கம் அகலாது அவலநிலை தொடர்கையிலே
பூதலத்தில் ஆண்டவனே அமைதியொளி தாராயோ?

தீபத்துடன் தூயோர்கள் திருக்குறளைப் படித்திடுவர்
தீபத்தால் தீயோர்கள் திருவூரையும் எரித்திடுவர்
ஆபத்தை உணர்ந்து அன்புக்கரம் நீட்டிடுவோம்
தீபமாய் எல்லோர்க்கும் அருளொளியை வழங்கிடுவர்.

நன்றி. வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(29/05/2023)

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading