பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 201

தலைப்பு — யாதுமாகி நிற்கின்றாள் எம்மன்னை

வறுமை வாட்டுவதால் வலிமை விரட்டுவதால்
உருவாகும் துயரை உண்மையைக் கண்டு
விருப்போடு வழிபடுவோர் வளம்பெற வழிகாட்ட
நறுமலராய் யாதுமாகி நிற்கின்றாள் எம்மன்னை.

துயரங்கள் தீர்ந்திட துன்பங்கள் நீங்கிட
உயர்வுக்காய் உள்ளன்போடு அம்பிகையை வழிபட்டு
பயமின்றி பசியின்றி பெருமையுடன் வாழ்ந்திட
அபயகரம் நீட்டுவாள் அம்பிகை அடியார்க்கு.

ஓயாமல் துயரில் ஒலமிடும் எம்மவர்க்கு
தாயாகக் கரம்நீட்டி காத்திடுவாள் எம்மன்னை
ஓயாது ஓரணியாய் உள்ளன்பொடு வழிபட்டால்
தீயவற்றைத் தீயிலிட்டு தேடுவதைத் தந்திடுவாள்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(19/11/2022)

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading