” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சித்தும் சந்திப்பு – 234

தலைப்பு – வலைப்பூ

வலைப்பூ வருகை வையகமே வரவேற்க
வரம்மாய் வம்புகளை வலைப்பூ கொடுக்க
வார்த்தைகளில் விளையாட்டு எல்லையற்றுப் கடக்க
வயோதிபம் ஒடுது வயல்களை நாடுது.

வலையை கட்டியது வரம்பை மீறவில்லை
வலைந்து கொடுத்து வியாபாரம் ஆகவில்லை
வாலிபம் கடந்தும் வரத்துக்காக வலியவில்லை
வலைப்பூ வந்ததும் விநாடியில் விந்தையானது.

முகநூலில் தற்பெருமை வலைப்பூவில் தவில்லடிக்க
தற்கொலையையும் மாபெரும் சாதனையாய் YouTube இல்பேச
What’s up இல் சில்லறைகளாய் சலங்கையொலி சிதற
Viberஇல் வாழ்த்துக்களை வையகமே வாழ்த்துது.

நிழல்கள் நிஜங்களாய் ai உருவாக்க
நியாயங்கள் நிழற்படங்களாய் நீதியற்று போக
நிம்மதியற்று பலர் நிராகதியாய் நிற்க
நிரந்தமற்ற உயிர்கள் வலையான வலைப்பூக்குள்.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
26/09/2023

Nada Mohan
Author: Nada Mohan