மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி — 63

தலைப்பு — இனிய பறவைகள்

கதிரவன் வரவில் கானப் பறவை
விடியலை வரவேற்க பூபாளம் இசைக்க
க கா,கிகீ,குகூ கொக்கொக்
மானிடம் மெய் மறக்க துயிழெழுப்பி

கூட்டிலும் காட்டிலும் வாழும் பறவை
காலநிலை மாற்றத்தை மனிதர்க்கு தெரிவிக்கும்
விவசாயின் நிலைமையை உணர்ந்த நண்பன்
புழுக்களை உண்ணும் இனிய பறவை.

தோகையை விரித்தால் மழையென நடனம்
தூதுவனாய் பறந்தான் அண்டை மன்னனிடம்
நடுவானத்தில் வட்டமாய் நோட்டமிடும் பெரியவன்
காதல் பட்சியாய் அழகான ஜோடிகள்

என்மன வானில் சிறகடிக்குது
இனிய பறவைகள்
இதயத்தை வருடுது பறவைகளின் கானங்கள்
நீங்களும் பேசுங்கள் தானியங்கள் போடுங்கள்
தண்ணீர் கொடுங்கள் நன்றிகளோடு இனியபறவைகள்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
10/01/2021

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading