சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..

ரஜனி அன்ரன் (B.A) ...சூடு பிடிக்கிறது....09.07.2026 பச்சைப்புல்வெளி போர்க்களமாக பந்து மட்டும் ஆயுதமாக வீரர்கள் கால்களோ பம்பரமாக...

Continue reading

நடிப்பது மானிடம்!!!

தினக்கவி-2365 நடிப்பது மானிடம்..!! செய்வதெல்லாம் செய்துவிட்டு பொய் தான் உரைத்திடுவார் போதுமென்ற அளவிற்கு நாடகமாய் நடித்து வெல்லுவர் பச்சைப் பிள்ளை...

Continue reading

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி — 63

தலைப்பு — இனிய பறவைகள்

கதிரவன் வரவில் கானப் பறவை
விடியலை வரவேற்க பூபாளம் இசைக்க
க கா,கிகீ,குகூ கொக்கொக்
மானிடம் மெய் மறக்க துயிழெழுப்பி

கூட்டிலும் காட்டிலும் வாழும் பறவை
காலநிலை மாற்றத்தை மனிதர்க்கு தெரிவிக்கும்
விவசாயின் நிலைமையை உணர்ந்த நண்பன்
புழுக்களை உண்ணும் இனிய பறவை.

தோகையை விரித்தால் மழையென நடனம்
தூதுவனாய் பறந்தான் அண்டை மன்னனிடம்
நடுவானத்தில் வட்டமாய் நோட்டமிடும் பெரியவன்
காதல் பட்சியாய் அழகான ஜோடிகள்

என்மன வானில் சிறகடிக்குது
இனிய பறவைகள்
இதயத்தை வருடுது பறவைகளின் கானங்கள்
நீங்களும் பேசுங்கள் தானியங்கள் போடுங்கள்
தண்ணீர் கொடுங்கள் நன்றிகளோடு இனியபறவைகள்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
10/01/2021

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading