நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன் அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு...

Continue reading

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு —165

தலைப்பு — திமிர்

அறியாமை நிலையும் புரியாமை விளைவும்
அறிவை மடித்து அலையாய் அடித்து
வெறிபிடித்த ஒன்றாய் வெளிவரும் திமிராய்
வெறுப்பையிது வளர்க்கும் வீண்பேச்சை விதைத்து.

செருக்குக் காட்டின் சேர்ந்திடும் கவலைகள்
உருக்கமாய் நடப்பின் உயர்வு வரவேற்கும்
கருத்தை உணர்ந்து செருக்கை விலத்திடின்
நெருங்கும் நல்லன சுருங்கும் தீயன.

தவிர்த்து நிறுத்திடின் திமிரை செருக்கை
அவித்திட வைத்திடின் ஆவணச் செயல்களை
குவித்திடும் குதூகலம் கனிந்திடும் அமைதி
புவியில் மங்கலம் பொங்கிடும் பொலிவுடன்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
08/03/2022

Nada Mohan
Author: Nada Mohan