திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏

வியாழன் கவி — 85

தலைப்பு — மழைக்காட்சி

வென்மேகங்கள் களைந்தது கருமேகங்கள் சூழ்ந்தது
வெளித்துப் போயிருந்தது மக்களின்றிய தெருக்கள்
வெள்ளைச் சீருடையில் துள்ளித்திரியுது குழந்தைகள்
வெள்ளிக் காசுகளாய் சிதறுது மின்னல்கள்.

முத்துக்களாய் விழுந்தன மழைத் துளிகள்
கத்துதுகள் பறவைகள் பறக்குது வேகமாய்
சத்தங்களால் பதைக்க வைக்கும் இடிமுழக்கம்
புத்தகத்தை புரட்டுகிறாள் மலர்வான முகத்துடன்.

கால்நடை கரையே செல்லத் துடிக்க
கரங்களில் மங்கையர்கள் குடையுடன் நடக்க
கரைகளில் குளமிட போட்டிபோடும். மழைத்துளிகள்
கானக்கிடைக்கும் மகிமையான மலர்தூவும் மழைக்காட்சி.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செத்தூர்ச்செல்வன்
London
30/03/2022

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading