” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“திரும்பிப் பார்க்கிறேன்”

நேவிஸ் பிலிப் கவி இல(372) 19/12/24

கடந்து வந்த பாதைகளை
நடந்து வந்த நாட்களைத்
திரும்பிப் பார்க்கிறேன்
பிரமிப்பாய் பிரகாசமாய்
மென் மலர் தூவிய
மலர்ப் படுக்கையாய்
சந்தோசம் என்னுள்ளே
பூச்சொரிய

சில நாட்கள்
மங்கலாய் இருளாய்
எத்தனை மேடு பள்ளங்கள்
குண்டும் குழியுமாய்
வீழ்த்தி விட கண்ணி வைத்துக்
காத்திருக்க

மன உறுதியோடு முன்னேறி
நடந்து வந்த நாட்களிலும்
குளங்களில் தேங்கி குட்டையாய்
மாறிடுவேனோ என்ற பயத்துடன்
கழிக்கின்ற காலங்கள்

அத்தனையும் தாண்டி வரும்
ஊன்று கோலாய்
நம்பிக்கைத் தூண்களாய்
என்னுள்ளே வலம் வந்து
பலம் தந்த பாமுமே உன்னை
நன்றியோடு நினைக்கின்றேன்

உன்னோடு நானும்
என்னோடு நீயும்
இணை பிரியா திருந்திடவே
இறை வேண்டல் செய்திடுவேன்
தினம்தினம்
நன்றியோடு நினைக்கின்றேன்.
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan