துளிர்ப்பாகும் வசந்தமே…

வசந்தா ஜெகதீசன்
துளிர்பாகும் வசந்தமே…
சொட்டுச் சொட்டாய் மழைத்துளி
சொல்லி வீழுதே தரைவழி
எழுச்சி காக்கும் ஏற்றமாய்
எழிலில் நிறையுதே பயிர்ச்செடி
வாழ்வின் உரமும் மனவழி
வண்ணத் துளிர்ப்பின் வரும்படி
காலத்துணையின் கருங்குழி
கடமை உணர்வின் நிறையணி
பாலம் போடுமே படிப்படி
பலமாய் துளிர்க்குமே முறைப்படி
ஞாலம் போற்றும் நம்பிக்கை
நமக்குள் நம்மை புடமிடும்
நாளை எழுச்சியாய் துளிர்விடும்
வசந்தம் வாழ்வாய் மிளிரவே
நிஜமாய் நிறையும் நித்திலம்
நீயாய் போடு உரம் நிதம்
நிமிர்வு உனக்குள் நிட்சயம்!

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading