நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

துளிர்ப்பாகும் வசந்தமே…

வசந்தா ஜெகதீசன்
துளிர்பாகும் வசந்தமே…
சொட்டுச் சொட்டாய் மழைத்துளி
சொல்லி வீழுதே தரைவழி
எழுச்சி காக்கும் ஏற்றமாய்
எழிலில் நிறையுதே பயிர்ச்செடி
வாழ்வின் உரமும் மனவழி
வண்ணத் துளிர்ப்பின் வரும்படி
காலத்துணையின் கருங்குழி
கடமை உணர்வின் நிறையணி
பாலம் போடுமே படிப்படி
பலமாய் துளிர்க்குமே முறைப்படி
ஞாலம் போற்றும் நம்பிக்கை
நமக்குள் நம்மை புடமிடும்
நாளை எழுச்சியாய் துளிர்விடும்
வசந்தம் வாழ்வாய் மிளிரவே
நிஜமாய் நிறையும் நித்திலம்
நீயாய் போடு உரம் நிதம்
நிமிர்வு உனக்குள் நிட்சயம்!

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan