” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

துளிர்ப்பாகும் வசந்தமே…

வசந்தா ஜெகதீசன்
துளிர்பாகும் வசந்தமே…
சொட்டுச் சொட்டாய் மழைத்துளி
சொல்லி வீழுதே தரைவழி
எழுச்சி காக்கும் ஏற்றமாய்
எழிலில் நிறையுதே பயிர்ச்செடி
வாழ்வின் உரமும் மனவழி
வண்ணத் துளிர்ப்பின் வரும்படி
காலத்துணையின் கருங்குழி
கடமை உணர்வின் நிறையணி
பாலம் போடுமே படிப்படி
பலமாய் துளிர்க்குமே முறைப்படி
ஞாலம் போற்றும் நம்பிக்கை
நமக்குள் நம்மை புடமிடும்
நாளை எழுச்சியாய் துளிர்விடும்
வசந்தம் வாழ்வாய் மிளிரவே
நிஜமாய் நிறையும் நித்திலம்
நீயாய் போடு உரம் நிதம்
நிமிர்வு உனக்குள் நிட்சயம்!

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan