தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

துளிர்ப்பாகும் வசந்தம்- 55

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-04-2025

துளிர்ப்பாகும் வசந்தம்
துயர் நீங்கும் இதயம்
இனிமையான குயிலின் கானம்
இதமான காற்றின் மெல்லிசை

பசுமையும் கொஞ்சம் படர
புத்துணர்ச்சி மகிழ்ச்சி பிறக்க
பூத்துக் குலுங்கும் பூங்காவனமாய்
புதுவாழ்வின் புதுமை நிகழ்வாய்

அயலவர் ஒன்று கூடி
அழகிய தெருக்களாய் அலங்கரித்து
திருவிழா விருந்தனெ சிறந்தோங்கி
வலுவான சமூகமாய் வளர்ந்தோங்கி

வாழ்வுக்கு கிடைத்த சிறந்த காலமாய்
வரவேற்போம் வசந்த காலத்தை
துளிர்ப்பாகும் வசந்தத்தில்
துளிர்க்கட்டும் இனிமையும்..

Jeba Sri
Author: Jeba Sri

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading